பெற்றெடுக்க கருவில் சுமந்தாய்
பெற்றெடுத்து நெஞ்சில் சுமக்கிறாய்
குழந்தை பசியால் உன் தூக்கத்தை கெடுத்தேன்
வளர்ந்து நோவால் உன் தூக்கத்தை பறித்தேன்
நோவு என்று விழுந்தால்
பதறும் உன் நெஞ்சு
இரவு பகல் பாராமல்
சேவை செய்ய துடிக்கும் உன் நெஞ்சு
தூக்கம் மறந்து உன் கண்கள் என்னை நோக்க
தூக்கத்தில் அசைந்தால் கூட உன் மனம் துடிக்க
நான் என்ன தவம் செய்தேன்
என் பசியாற பத்தியம் இருந்தாய்
என் தாகம் தீர்க்க துடித்தாய்
உன் வாழ்க்கை முழுவதும்
என் வாழ்க்கைக்காக அர்ப்பணித்தாய்
உன் ஆசை விற்று
என் ஆசைகள் செய்தாய்
உன் கனவுகளை இருளாகி
என் கனவுக்கு ஒளி கொடுத்தாய்
எனக்கு சுவை கொடுக்க
உன் பசி துறந்தாய்
இத்தனை நீ எனக்காக செய்ய
நான் உனக்கு என்ன செய்யப் போகிறேன்
என் வாழ்க்கை முழுவதும் தந்தாலும் ஈடாகாது
என் உயிர் அம்மா.
Arumai 🤩🙌
ReplyDeleteNandrigal 😍😍😘
Delete